நாவலப்பிட்டி ஹபுகஸ்தலாவ பிரதேசத்தில் வீடு ஒன்றிலிருந்து 12 ரக துப்பாக்கி மற்றும் வெற்றுத்தோட்டாக்கள், வேட்டையாடப்பட்ட மானின் தோல் ஆகியவற்றுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபரிடமிருந்து அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்த 12 ரக துப்பாக்கி ஒன்றும், வெற்றுத்தோட்டா க்களும் மானின் தோலும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சந்தேக நபரை நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கியை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை சந்தேக நபர் மேற்படி துப்பாக்கியை எங்கிருந்து எடுத்து வந்தார்? என்ற கேள்விக்கு பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புரெவிப் புயலினால் சேதமடைந்த கடற்றொழில் உபகரணங்களுக
இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்
அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), ராஜபக்ச குடும்பம் சம்
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் பிக்கப் ரக வாகனமு
உலகின் மிக சக்திவாய்ந்த கடவுசீட்டு பட்டியலில் இலங்கை
நாட்டில் விநியோகிக்கப்படும் திரிபோஷா தயாரிப்புகளில்
இலங்கைக்கு உரம் வழங்க ஈரான் அரசாங்கம் விருப்பம் தெரிவ
சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புத
பாணந்துறையில் உள்ள உணவகம் மற்றும் விடுதி ஒன்றில் தி
முனிதாச குமாரதுங்க கல்லூரிக்கு அருகில் பேருந்தில் இர
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பெரியகமம் பகுதியில் அம
பாரிய மருந்து தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத
பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை ச
களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறை
இன்று (11) காலை 7 மணி முதல் 12 மணி வரையில் அனைத்து சுகாதார சே
