அமெரிக்க டொலரின் பெறுமதி கணிசமான அளவு உயர்வடைந்துள்ள போதிலும் மீன் ஏற்றுமதியின் மூலம் நாட்டுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் கிடைக்கப்பெறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கடற்றொழில் துறை பாதிக்கப்படுவது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தின் தலையீடு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்ட மீன் மீதான தடை நீக்கப்பட்டதன் பின்னர் இலங்கையில் மீன் ஏற்றுமதி கணிசமான அளவு அதிகரித்த போதிலும் அது மீண்டும் தேக்கமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
இதன் காரணமாக மீன்பிடித் தொழில் தொடர்பான ஏனைய வர்த்தகர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தினார்.
எனவே இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
எரிபொருள் விலை தொடர்பில் மீனவர்களுக்கு அரசாங்கம் சற்று நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் இந்நாட்டு மீனவர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய முறையில் நட்டஈடு வழங்கப்படாததால் சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கு உரிய முறையில் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்
சுயாதீன மனித உரிமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழ
வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம
வெகுஜன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் கிராமத்திற்கு தகவல்
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா வைரஸ் தொற்றாளர
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற
கொழும்பு,மருதானை – டீன்ஸ் வீதியிலுள்ள சுகாதார அமைச்
மத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்து
ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் போலியான
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி மற்
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் முழுமையான கட்ட
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம்
கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்ளைப் பின்பற்றி எதிர்வரு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தை 1000 ர
பயணக் கட்டுப்பாட்டில் யாழ்.குடாநாடு முடங்கிக்கிடக்க
அலரி மாளிகை பகுதியில் அரசாங்கம் குறிப்பாக மகிந்த ராஜப
