காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை அசிங்கப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தற்போதைய நிலையில் யாரும் பிரபலம் அடைய விரும்பினால் கோட்டாகம சென்றால் சாத்தியமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற மே தின கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இன்று வீதியில் இருப்பவர்களில் அதிகமானோர் மத்திய வர்க்கத்தினர் தான். இன்று அவர்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல், சவால் ஏற்பட்டுள்ளது.
நெருக்கடிக்கு மத்தியில் ஆர்ப்பாட்டங்களில் வீரனாகுவது பெரிய விடயமல்ல. எந்த ஒரு கோமாளியும் காலி முகத்திடலுக்கு சென்றால் ஹீரோவாகுவது பெரிய விடயமல்ல.
நான் அண்மையில் பார்த்தேன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தேசிய கொடியுடன் பொலிஸ் சீருடையில் சென்று வீரக் கதைகள் பேசிக்கொண்டிருந்தார். அவர் யார் என தேடி பார்த்தால் 5 கிலோகிராம் கஞ்சாவுடன் சிக்கிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவர். ஒழுக்காற்று விசாரணைகளுக்குள்ளானவர். அவர் அங்கு சென்றதால் வீரனாகிவிட்டார்.
இன்னும் சிலரும் உள்ளனர். பெயர்களை குறிப்பிட்டால் மனமுடைய வாய்ப்புகள் உள்ளது. எந்த ஒரு அயோக்கியனும் காலி முகத்திடலுக்கு சென்றால் அவர் வீரன். இவ்வாறு நெருக்கடியில் வீரனாகுவது வீரன் அல்ல அந்த நெருக்கடியை தீர்ப்பதே வீரருடைய செயல் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் ந
மகா சங்கத்தினரின் திட்டத்தின் படி கோட்டாபய ராஜபக்ச மக
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்து
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங
பிரித்தானியாவால் இலங்கைக்கு 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண
ஜப்பான் அரசின் நிதியுதவியில் யாழ். பல்கலைக்கழக கிளிநொ
இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு உதவுமாறு
யால வன சரணாலயத்தில் அரியவகை கருஞ்சிறுத்தை ஒன்றை சுற்ற
கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர்ந்த ஏனைய மரக்கற
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் நாட்
நாடு முழுவதும் வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்
தமிழினத்துக்கு கடந்த காலத்தில் இடம்பெற்ற இனப்படுகொல
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மேனிக்க
அச்சுவேலி - வளலாயில் சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்து
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற
