நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் 'எண்ணித் துணிக' படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் கிடைத்துள்ளது.
நடிகர் ஜெய் கோலிவுட்டின் திறமையான நடிகர்களில் ஒருவர். ஆனால் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் தொடர் தோல்வியாச் சந்தித்து வருகின்றன. கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் வீரபாண்டியபுரம் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. மீண்டும் ஒரு ஹிட் கொடுப்பதற்கான பாதையில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறார் ஜெய்
ஜெய் தற்போது அறிமுக இயக்குனர் எஸ்கே வெற்றிச் செல்வன் இயக்கத்தில் 'எண்ணித் துணிக' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். சுரேஷ் சுப்ரமணியம் என்பவர் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் இருந்து வெளியான போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளன.
தற்போது எண்ணித் துணிக படத்தில் ரிலீஸ் தேதி அப்டேட் கிடைத்துள்ளது. வரும் ஏப்ரல் 28-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஜெய், சுந்தர் சி உடன் 'பட்டாம்பூச்சி' படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

சிவா கார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கே
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென்னிந்தியாவின் பி
நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் இணைந்து நடிக்கும் படத்
குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர்
: கடும் மன அழுத்தம் காரணமாக கன்னட நடிகை ஜெயஸ்ரீ ராமையா
சினிமா நடிகர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வரு
விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற தொடர் மூலம் மக
பாரதி கண்ணம்மா சீரியல் TRP-யில் தொடர்ந்து பல சாதனைகளை பட
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா த
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் மூன்றாம் சீசன்
நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் எனப் பன்முகம்கொண்
சாதாரண படங்களை கண்டு வந்த தமிழ் மக்களுக்கு பிரம்மாண்ட
தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘மாறன்’ படத்தின் படப்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை மீனா. தமிழ்,
பிக்பாஸ் அல்மேட் நிகழ்ச்சிக்குள் தொகுப்பாளராக நுழைந
