நயன்தாரா தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள திரையுலகிலும் பல வருடங்களாக கொடி கட்டி பறக்கிறார். அவரது இடத்தை வேறு எந்த நடிகையாலும் இதுவரை நெருங்க முடியவில்லை. நயன்தாரா தனித்தும், பிற கதாநாயகர்களுடன் இணைந்தும் நடித்துள்ள படங்கள் வசூலிலும் சக்கை போடு போடுகின்றன. இதனால், நயன்தாராவின் மார்க்கெட் படத்துக்கு படம் உயர்ந்து வருகிறது. ஓரிரு வருடங்களுக்கு முன்பு வரை அவரது சம்பளம் அதிகபட்சம் ரூ.3 கோடி என்று இருந்தது. பின்னர் அது ரூ.5 கோடியாக உயர்ந்தது.
இந்நிலையில், தற்போது சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்திவிட்டதாக இணைய தளங்களில் தகவல் பரவி சக நடிகைகளை ஆச்சரியப்படுத்தி உள்ளது. அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்துக்குத்தான் அவர் ரூ.10 கோடி கேட்டதாக கூறப்படுகிறது.
படத்தில் நடிக்க நயன்தாரா 20 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், அதற்கே இவ்வளவு சம்பளம் என்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனாலும், படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. ஏற்கனவே, தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவியும், நயன்தாராவும் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிம்பு திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான ஒரு
தமிழ் சினிமாவின் டா
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து
கொல்லிமலைப் பகுதியில் அதிகம் இதுவரை சினிமா படப்பிடிப
தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் பிரபலங்களாக இருப்பத
இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவர
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொ
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. எச்.வ
இந்திய சினிமாவில் ச
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திர
இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த
சில மாதங்களுக்கு நட்சத்திர ஜோடி தனுஷ் - ஐஸ்வர்யா தங்கள
நடிகை ரெஜினா நடிப்பில் உருவாகும் ‘சூர்ப்பனகை’ டிர
தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்
இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளி
