பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி வகித்து வரும் நிலையில், 2021 ஆம் ஆண்டு இறுதி வரை பாதுகாப்பு அமைச்சு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு செலுத்த வேண்டிய 5 ஆயிரத்து 641 மில்லியன் ரூபா பணத்தை செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது.
அமைச்சரவை பத்திரம் ஒன்றின் மூலம் இந்த தகவல் கசிந்துள்ளது. அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த அமைச்சரவை பத்திரத்தை கடந்த 30 ஆம் திகதி வெளியிட்டுள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வியத்புர வீடமைப்பு தொகுதியில் உள்ள வீடுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்களாக வழங்குவதற்காக இந்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த மே 9 ஆம் திகதி நடந்த வன்முறை சம்பவங்களில் வீடுகளை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகளை வழங்குதற்கான மானியத்தை ஒதுக்குவதற்காக இந்த அமைச்சரவை பத்திரம் கொண்டு வரப்பட்டது.
இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய பாதுகாப்பு அமைச்சு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு 6 ஆயிரத்து 141 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் அதில் 500 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்பு வட்டி திட்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 147 ற்கு மேற்பட்ட இள
வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங
உலகில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளின்
நான்கு மாவட்டங்களில், காவல்துறை அதிகார பிரிவு ஒன்றும்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சென்ற அனைத்த
இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக யாழ்ப்பாணத்திற்கு
கொட்டாஞ்சேனை - பரமானந்தா மாவத்தையில் இடம்பெற்ற துப்பா
எஹலியகொட பிரதேசத்தில் பாடசாலை மாணவியான பத்து வயது சிற
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட பின்னா்
உலகளாவிய ரீதியில் முன்னணி சுற்றுலா நாடுகளின் பட்டியல
நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையி
நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையி
பாரிய கொரோனா நோய்த் தொற்று நிலைமைக்கு மத்தியில் எரிபொ
நாட்டில் தற்போது நடந்து வரும் அரசாங்கத்திற்கு எதிரான
