யாழ்.திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மூவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில்அனுமதிக்கப்பட்டிருப்பதாக் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் திருநெல்வேலி இராமலிங்கம் வீதியில் பூங்கனிச்சோலைக்கு அருகில் இன்று நள்ளிரவு (17-05-2022) இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த விபத்து குறித்து தெரியவருவது,
ஒரு மோட்டார் சைக்கிளில் மூவரும், மற்றுமொரு மோட்டார் சைக்கிள் இருவரும் பயணித்த நிலையில் இரு மோட்டார் சைக்கிள்களும் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர் எதிரே மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் இரண்டும் தீ பற்றி எரிந்த நிலையில் அயலவர்கள் கூடி தீயினை அணைத்து, பாடுகாயமடைந்த மூவரை நோயாளர் காவுவண்டியை அழைத்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து, தகவலறித்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேவேளை, விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்து
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹர
டெங்கு வைரஸின் அறிகுறிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூ
முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றியமானது முல்லைத்தீவு ம
முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய ப
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூ
அரச நிறுவனங்களின் பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் செ
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 130 ப
திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) வ
பிணை முறிக்கடனைத் திருப்பிச் செலுத்துவதை தாமதிப்பதற
கொலை செய்து சடலத்தைக் கூரையில் தொங்க விடுவதாக மிரட்டல
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அவ்வப்போது அத
இலங்கைக்குள் உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் டொலர்
வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஐந்தாவத
