நாட்டில் அவசர காலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் சூழ்நிலையில், கல்பிட்டி தீவுக்கூட்டத்தில் உள்ள 14 தீவுகளில் இரண்டாவது பெரிய தீவான ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட உச்சமுனி தீவு வெளிநாடு ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீவு 417 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சுவிஸர்லாந்து நாட்டின் நிறுவனம் ஒன்றுக்கு 30 ஆண்டு கால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இது சம்பந்தமான உடன்படிக்கை நேற்று சுற்றுலாத்துறை அமைச்சில் கையெழுத்திடப்பட்டதாகவும் அகில இலங்கை சுற்றுலா வழிக்காட்டிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சுக்கு சொந்தமான இந்த தீவை குத்தகைக்கு விடுவது தொடர்பில் 2000 ஆம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்ட தொகைக்கு 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது எப்படி என சுற்றுலா வழிக்காட்டிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
எதனை நிர்மாணிப்பதற்காக இந்த தீவு வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவில்லை. பல்லுயிர்களை கொண்டுள்ள இந்த தீவில் நிர்மாணிப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்னர் பெற வேண்டிய சுற்றுச் சூழல் சம்பந்தமான அறிக்கையும் பெறப்படவில்லை என சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இல்லாத சந்தரத்ப்பத்தில் எவரது தேவைக்காக இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது என்பதை தேடி கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அகில இலங்கை சுற்றுலா வழிக்காட்டிகள் சங்கம் கூறியுள்ளது.
இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்
நிர்வாக ரீதியான விடயங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்த
அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு ஏற்ற இறக்க
தமிழ் தேசிய இனத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பெருந்தோ
களுவாஞ்சிக்குடி தனிமைபடுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி
வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடிவைத்தகல் கிராமத்திற்க
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர்
கம்பஹாவிலுள்ள மேலதிக வகுப்பு நிறுவனத்தின் பெண்கள் கழ
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழ
கோழி இறைச்சியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட
ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்ச
பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் ச
பொல்பித்திகம பஸ் நிலையத்தில் நின்றிருந்த யுவதி ஒருவர
ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல்
