குருணாகல், நாரம்மல பொது நூலகத்துடன் கூடிய பிரதேச சபை கட்டடத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று திறந்து வைத்தார்.
குருநாகல் – புத்தளம் வீதியில் யந்தம்பலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள தனது மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகத்தை திறந்து வைக்க வீதியை மாற்றி பிரதமர் பயணித்ததாக தெரிய வருகிறது.
பிரதமரின் பிரத்தியேக செயலாளர் ரோஹித ராஜபக்ஷவின் பங்கேற்புடன் இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்து. எனினும் நேற்றைய தினம் ரோஹித ராஜபகஷ பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது.
குறித்த அலுவலகத்தின் ஒருங்கிணைப்பு பொறுப்பை ரோஹிதவிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாரம்மல பொது நூலகத்துடன் கூடிய பிரதேச சபைக் கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர், தனது ஒருங்கிணைப்புக் காரியாலயத்தை திறப்பதற்காக நாரம்மல-குருநாகல் பிரதான வீதிக்கு வரவிருந்தார். எனினும் எரிபொருள் வரிசைகளால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க அதிவேக நெடுஞ்சாலை ஊடாக யந்தம்பலாவ சென்றடைந்துள்ளார்.
நாரம்மல பகுதியிலிருந்து பயணத்தை ஆரம்பித்த பிரதமரின் வாகனத் தொடரணி அலவ்வ ஊடாக நாகலகமுவ அதிவேக வீதி நுழைவாயிலில் மத்திய அதிவேக வீதிக்குள் பிரவேசித்து யந்தம்பலாவை நோக்கிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மலையக புகையிரதப் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை நோக
வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்ற
பிரதமரின் வங்கிகணக்கிலிருந்து பலமில்லியன் ரூபாய்களை
இலங்கையில் இன்றைய தினம் பல்வேறு இடங்களில் அரசாங்கத்த
கூட்டு ஒப்பந்தத்தை இரத்துசெய்தால் அது தொழிலாளர்களுக
கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எ
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு வி
இலங்கையில் கார் உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் செலு
அனைத்து அரசாங்கப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவிலும் உள
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறு
இலங்கைக்கு வந்த வெளிநாட்டவர்கள், நாடு நன்றாக இருந்த
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள்
மருத்துவ விடுப்பு எடுக்காமல் உத்தியோகபூர்வ நடவடிக்க
தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போரா
