கடந்த மாதம் 26ஆம் திகதி மாலைதீவில் உயிரிழந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸ் இன் பூதவுடல் நேற்று இரவு 10 மணியளவில் மன்னார் பனங்கட்டுக் கொட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
டக்சன் பியூஸ்லஸ் இன் பூதவுடல், கடந்த 3ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்தது.
இந்த நிலையில் பூதவுடல் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு , மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்து கையளிக்கப்பட்டது.
இதனையடுத்து மனைவியிடம் ஒப்படைக்கப்பட பூதவுடல் யாழ்ப்பாணத்துக்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கிருந்து நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் பனங்கட்டுக் கொட்டில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டது.
யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் வரும் வழியில் பூநகரி, முழங்காவில் , தேவன் பிட்டி,விடத்தல் தீவு,ஆண்டாங்குளம்,அடம்பன் போன்ற இடங்களைச் சேர்ந்த கால்பந்தாட்ட கழக வீரர்கள், மற்றும் பல ஆயிரக்கணக்கான மக்கள் டக்சன் பியூஸ்லஸ் இன் பூதவுடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். 





அன்பர்களுக்கு பேச்சிலும் செயல்பாடுகளிலும் நிதானத்தை
அதீத திறமை படைத்த பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்கள
நீச்சல் குளம், விளையாட்டு அரங்கம் என வசதிகளுடன் உலகின
அமெரிக்காவில் காபி குடிக்க பால் வாங்குவதற்கு மளிகை கட
கொரோனாவுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள முக்கியமான தடு
அம்பாறை திருக்கோவிலை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பி
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் நாய
திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றுமில்லை என்ற
சிறிய கம்பியால் செய்யப்பட்ட ஹூக்கு எனப்படும் சேப்டி ப
அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூ
எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஜெனிவா மனித உரிமை
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக
இந்தியாவுக்கு பல இலக்குகள் இருக்கின்றன. இந்தியாவின் ம
மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் என்
