கடலூர் அருகே தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் வைத்த நபரே பணத்தை திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் அடுத்த கே.என் பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் நேற்று காலை வைக்கப்பட்ட நிலையில் இரவு பணம் திருடு போய் இருப்பதாக திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
ஏ.டி.எம் மையத்திற்கு பணத்தை நிரப்புவதற்காக பணத்தைக் கொண்டு சென்ற நான்கு நபர்களிடம் விசாரித்த போது கிருஷ்ணகுமார் என்பவர் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். விசாரணையில் நேற்று மாலை சக ஊழியருடன் ஏடிஎம்மில் பணம் நிரப்ப சென்றதாகவும் அந்த ஏடிஎம் மையத்தில் சிசிடிவி கேமரா எதுவும் இல்லாத இருந்தும் இரவு நேரத்தில் அந்த ஏடிஎம் மையத்திற்கு சென்று பணத்தை தருவதாக ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் அவரிடம் மேலும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏடிஎம் மையத்தில் இருந்து 9 லட்சம் பணம் களவு போய் இருப்பதாக மேற்பார்வையாளர் ராஜா என்பவர் திருப்பாதிரிப்புலியூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதில் கிருஷ்ணகுமார் நெல்லிக்குப்பத்தில் அடுத்த விஸ்வநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பணத்தை திருடியது ஒப்புக்கொண்டு மேலும் அவரிடம் இருந்து ஆறு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது மீதமுள்ள பணத்தை அவர் என்ன செய்தார் என்பதை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் மருத்துவர் ஒருவர் சுமார் ஐந்து முறை கொரோன
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சண்டை ந
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது, தாளமொக்கை ஆத
சென்னை: ‘திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் 100 நாட்கள் போ
சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக
தமிழக விளையாட்டு வீரர்கள் 15 பேருக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்த
தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட
இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டு 43 ராமேஸ்வரம் மீனவர
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூ
ஜார்கண்ட் மாநிலம் தன்பாதில் மாவட்ட நீதிபதி ஆட்டோ ஏற்ற
மறைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.ப
ரெயில்வே துறையில் தனியாரையும் அனுமதிக்கும் திட்டத்த
குஜராத் பிரிவை சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் அ
சென்னை மெரினா கடற்கரை சாலை நேற்று காலை வழக்கம்போல் பர
பஞ்சாப் மாநில ஆளும் காங்கிரசில் ஏற்பட்ட உட்கட்சி பூசல
