இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்த பண வீக்கம் 2022 ஜனவரியில் 14.2 வீதமாக உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 டிசம்பர் மாதம் 22.1 வீதமாக பதிவாகியிருந்த உணவு பணவீக்கமானது, 2022 ஜனவரியில் 25 சதவீதமாக அதிகரித்ததுள்ளது.
அதேவேளை 2021 டிசம்பரில் 7.5 சதவீதமாக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் 2022 ஜனவரியில் 9.2 சதவீதமாக உயர்வடைந்துள்ளதாக மத்திய வங்கி கூறியுள்ளது.
அதன்படி, உணவு வகைக்குள் உள்ளடங்கியுள்ள, அரிசி, புதிய பழங்கள், பால் மா மற்றும் பாண் ஆகியவற்றின் விலைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து, வீட்டுவசதி, நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் பிற எரிபொருள் ஆகியவற்றில் காணப்பட்ட விலை அதிகரிப்பு காரணமாக உணவு அல்லாத பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
கல்வித்துறை சார்ந்த உயர் கல்வி மற்றும் தொழில் பயிற்சிக்கான பாடநெறி கட்டண அதிகரிப்பு, உணவகம் மற்றும் விடுதி துறை சார்ந்த துணைப் பிரிவுகள் சார்ந்த உணவு அல்லாத பொருட்களின் விலைகளிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி கூறியுள்ளது.
குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம் அதிகம்
விகாரைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு மின்சாரத்தை விநிய
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு மாதாந்தம் 100
நாட்டிற்குள் இந்திய அமைதிப்படை வருவதற்கு வாய்ப்பிரு
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு மாதாந்
நாடு முடக்கப்பட்டிருப்பதுபோல் தெரியவில்லை என ஐக்கி
இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏ
மா மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பு மற்றும் பொருட்க
நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் விரைவில் நம்பிக்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னால் இருக்கும்
நாடாளுமன்றத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி.
மன்னார்- உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க பாடசாலை மாணவன் சி.
கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைக
கொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார
