கிளிநொச்சியிலிருந்து அம்பாறை - பொத்துவில் பிரதேசத்திற்கு மகிழுந்து ஒன்றில் கஞ்சா கடத்தி சென்ற எட்டரை கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவரைக் கைது செய்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவதினமான இன்று அதிகாலை 5மணியளவில் கல்முனை - நீலாவணை வீதி சோதனைச்சாவடியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதுடன் மகிழுந்து ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
கல்முனையை நோக்கி பிரயாணித்த மகிழுந்து ஒன்றை நிறுத்தி இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது மகிழுந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எட்டரை கிலோகிராம் கேரளா கஞ்சாவை மீட்டுள்ளதுடன், இருவரைக் கைது செய்து கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பொலன்னறுவை மற்றும் திருக்கோவில் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் கிளிநொச்சியிலிருந்து பொத்துவில் பிரதேசத்திற்குக் கஞ்சாவை விற்பதற்காகக் கடத்திச் சென்றுள்ளார்கள் எனவும் பொலிஸாரிடம் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கோதுமைமாவின் விலை 290 ர
நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையில
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுத
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை பகுதியில் கு
பின்வத்தை வடுபாசல் தோட்டத்தில் வசிக்கும் 16 வயதுடைய சி
லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைய
கொவிட் -19 தொற்றுக்கு பின்னர் முதலாவது சீன சுற்றுலாப்பய
இந்த வருடத்தின் கடந்த 8 மாத காலப்பகுதியில் சிறுவர் துன
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் பிரதமர்
எல்லை தாண்டி மீன் பிடித்த எட்டு இந்திய மீனவர்கள் இலங்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகத
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நி
திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முத
உக்ரைன் மீது படையெடுக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்
