சிம்பு நடிப்பில் வெளியான ”போடா போடி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதன்பிறகு நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கினார். இவர் தற்போது காத்துவாக்குல் ரெண்டு காதல் என்ற படத்தை நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கி வருகிறார். இதற்கிடையில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் சேர்ந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஒரு புகைப்படம் அனைவரையும் முணுமுணுக்க வைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிவிட்டு அதில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் ”எனது முன்மாதிரியாக திகழும் ஒரு நபரை நான் சந்தித்தபோது எப்படி உணர்ந்தேன் என்று ஒரு தலைப்பு மூலம் என்னால் விளக்கிட முடியாது. என் அடையாளம், என் நாயகன். நான் அவரைச் சந்தித்து, “ஆக்ஷன்” சொல்லி, அவரை இயக்குவது பற்றிய ஒரு நல்ல கதை விரைவில் வரும்” என்று பதிவிட்டிருக்கிறார்.
இதன் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவன், தோனியை வைத்து பட இயக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது, இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

பீஸ்ட் படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் க
தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களாக பார்க்கப்படு
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ
மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ரிலீஸ
பிரபல நடிகை கல்யாணி தான் தற்கொலைக்கு முயன்றதாக கூறியு
தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ‘ஆனந்தம்’ படம் மூல
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்க
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா த
ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தில் பிரபல நடிகையான தமன்
நடிகை காஜல் அகர்வால் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்க
விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பான நிக
கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நேரத்தில் இந்தியா
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒர
பிக்பாஸ் 5வது சீசனின் வெற்றியாளராக ராஜு தேர்வாகிவிட்ட
