மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி தான் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘நான் இன்று வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருக்கிறேன். யூனியன் பிரதேச நிர்வாகம் கூறுவது போல காஷ்மீரில் இயல்புநிலை நிலவவில்லை. நான் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருப்பது, இயல்பு நிலை நிலவுவதாக நிர்வாகம் சொல்லும் பொய்யை அம்பலப்படுத்துகிறது’ என்று கூறியுள்ளார்.
மேலும், ஆப்கானிஸ்தானில் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் குறித்து கவலைப்படும் மத்திய அரசு, காஷ்மீர் மக்களுக்கு அதே உரிமைகளை நிராகரிக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். காஷ்மீர் குப்காரில் உள்ள தனது வீட்டின் மெயின் கேட்டை மறைத்தபடி நிற்கும் பாதுகாப்பு படை வாகன படத்தையும் மெகபூபா முப்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
பாலஸ்தீனத்தில் ரமல்லாவில் உள்ள இந்திய தூதகரகத்தில், இ
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நா
சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர்
விவசாயிகள் போராட்டம், டிராக்டர் பேரணியில் நடந்த வன்மு சட்டப்பேரவையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருக மராட்டியத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா பாதிப்பு தொடர இந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள கதிர்வேல் சந்திய இலங்கை வசமுள்ள படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இராம
