மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி தான் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘நான் இன்று வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருக்கிறேன். யூனியன் பிரதேச நிர்வாகம் கூறுவது போல காஷ்மீரில் இயல்புநிலை நிலவவில்லை. நான் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருப்பது, இயல்பு நிலை நிலவுவதாக நிர்வாகம் சொல்லும் பொய்யை அம்பலப்படுத்துகிறது’ என்று கூறியுள்ளார்.
மேலும், ஆப்கானிஸ்தானில் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் குறித்து கவலைப்படும் மத்திய அரசு, காஷ்மீர் மக்களுக்கு அதே உரிமைகளை நிராகரிக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். காஷ்மீர் குப்காரில் உள்ள தனது வீட்டின் மெயின் கேட்டை மறைத்தபடி நிற்கும் பாதுகாப்பு படை வாகன படத்தையும் மெகபூபா முப்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறத
வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய ச
தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 2 மண்டலங்களாக பிரிக்
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முக்கிய கட்டத
கேரளாவில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் யானை பாகன் மீ
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஆ
இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உத்தரபிரத
நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி விவ
இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்தியாவின் பொருளாதார ஆத
தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையா
எழுவர் விடுதலையில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை எ
முஹம்மது நபியைப் ப
