மைசூரு பல்கலைக்கழக 101-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது, அந்த பல்கலைக்கழகத்தில் படித்து வரும் சைத்ரா நாராயண் என்ற மாணவி, பல்வேறு பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று 20 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார்.
இந்த சைத்ரா நாராயண், உத்தரகன்னடா மாவட்டம் சிர்சி அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். அவருடைய கிராமத்துக்கு காலை ஒன்றும், மாலை ஒன்றுமாக மொத்தமே 2 பஸ்கள் மட்டுமே இயங்கி வந்தன. அந்த பஸ்சில் தான் சைத்ரா நாராயண் சிர்சிக்கு வந்து பி.யூ.சி. படித்தார்.
பின்னர் அவர் மைசூரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வேதியியல் பாடப்பிரிவில் இளங்கலையும், முதுகலையும் படித்தார். முறையான அடிப்படை வசதிகள் கூட இல்லாத குக்கிராமத்தில் இருந்து வந்து, சைத்ரா நாராயண் 20 தங்கப்பதக்கங்களை பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடமையை இன்று பொறுப்பேற்ற
கடலூர் அருகே தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் வைத்த நபரே
முஸ்லிம் சகோதரிகளுக்காக நாங்களும் ஹிஜாப் அணிவோம் என த
இந்தியாவில் வீட்டிற்குள் விஷ வாயுவை நிரப்பி ஒரே குடும
தலைநகர் டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகா
புதுச்சேரி அரசு கவிழ்வதற்கு ஜெகத்ரட்சகன் காரணம் என கு
இந்தியாவில் மகன், மருமகள் மற்றும் இரண்டு பேத்திகளை வீ
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.ச
கடலூர் மாவட்டம் புவனகிரியில், அ.ம.மு.க.வின் பொதுச் செய
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்துள்ள சிஜர்சி என்ற
நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால் அதிமுக வெ
பெங்களூரு பத்மநாபநகரில் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள
கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை கட்டளை
மறைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.ப
