வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இன்று முதல் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் வழங்கப்படவுள்ள இந்த இடமாற்ற உத்தரவுக்கமைய தற்போதைய கல்வி, சுகாதாரம், பேரவை, உள்ளூராட்சி மற்றும் ஆளுநர் செயலக செயலாளர்களே இடமாற்றப்படுகின்றனர்.
அதன்படி சுகாதார அமைச்சின் செயலாளர் செந்தில்நந்தனன் மாகாண சபை பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநரின் செயலாளர் சரஸ்வதி மோகநாதன் சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோ உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகவுள்ள வரதீஸ்வரன் கல்வி அமைச்சின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
பேரவை செயலாளர் குகநாதன் பிரதி பிரதம செயலாளராக (நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை, பதில் பிரதி பிரதம செயலாளராகவும் பணியாற்றி வந்த, பற்றிக் ரஞ்சன் உள்ளூராட்சி திணைக்களத்தின் ஆணையாளராகச் செயற்படுவார்.
ஆளுநரின் செயலாளராகத் தற்போது பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஒருவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கான அறிவித்தல் நேற்று (19) மாலைய தொலைநகல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மடகஸ்கரில் கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொட
வவுனியா- மகாரம்பைக்குளத்திலுள்ள வீடொன்றிற்குள் வாள்
கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’
ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிலுக்கான பொறுப்புகளை நி
கிழக்கு முனையை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பாக பல்வ
அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப
கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும் சி
தங்கப் பொருட்களைக் கடத்தல் நோக்கத்துடன் வெளிநாடுகளி
முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அவதானம
நாட்டில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கில
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி கள் தவ
சந்தையில் தற்போது பெரி டின் மீன் ஒன்றின் விலை 600 ரூபாவா
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பக
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்களின்
