இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில்லை என்று சுற்றுலாப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அந்த பகுதிகளை சோதனையினையிட்ட போது சுற்றுலா பயணிகள் முகக் கவசமின்றி நடமாடுவதனை அவதானிக்க முடிந்துள்ளது.
அதற்கமைய, சுற்றுலாத் தலங்களாகக் கருதப்படும் காலி, மாத்தறை, ஹிக்கடுவ, மிரிஸ்ஸ உள்ளிட்ட நகர்ப்புறங்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் பொது இடங்களுக்குச் செல்வதை அவதானிக்க முடிந்தது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டிஆராச்சியிடம் வினவிய போது, சுற்றுலா பயணிகளை முகக் கவசம் அணியுமாறு கட்டாயப்படுத்த முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். எனினும் அதற்கு தற்போது உரிய காலம் அல்ல என அவர் கூறியுள்ளார். வெளிநாட்டவர் ஒருவரிடம் சென்று முகக் கவசம் அணியுமாறு கூறும் போது, “உங்கள் நாடு பாதுகாப்பாக இருப்பதாகவும் 90% தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் கூறுகிறீர்கள். பிறகு நாம் ஏன் முகக் கவசம் அணிய வேண்டும்?” என சுற்றுலா பயணிகள் வினவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த சிறுபோக பயிர் செய்கையின் போது விவசாயிகளுக்கு உ
கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தி
யாழ்ப்பாணம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கொக்குவில் ப
உண்மைச் செய்திகளை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பது ம
இலங்கையின் நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்றுடையவர்களின
நாட்டில் 50 மில்லியன் டொலருக்கும் குறைவான அமெரிக்க டொல
மன்னார்- உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க பாடசாலை மாணவன் சி.
யாழ்ப்பாணத்தில் பீட்ரூட் அறுவடை செய்யப்படும் நேரத்த
ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவிட்ட நிலையில் இந்த
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நில
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டித்தன்மை
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் - தலைமன்னார்
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறு
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (08) 24 கரட் தங்கப
கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விஷேட கலந்துர
