இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அறிவுறுத்தல்களை மதிப்பதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை மின்சாரசபையின் பதில் பொது முகாமையாளர் பதவிக்கு சுசந்த பெரேராவை நியமித்தமைக்கு மின்சாரசபையின் பொறியியலாளர்கள் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மின்சாரசபையின் மரபுகளுக்கு அமைய அதிக சேவை மூப்பு உடைய மின் பொறியியலாளரே பொது முகாமையாளர் பதவிக்கு அமர்த்தப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மரபுகளை மீறி தகுதி குறைந்த ஒருவர் பொது முகாமையாளர் பதவிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மின்சாரசபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகளுக்கு இந்த நியமனமே பிரதான ஏது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே தகுதியில்லாத ஒருவரை பதவியில் அமர்த்திய இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரிகளே இந்த பிரச்சினைகளுக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பொது முகாமையாளர் பதவிக்கு அமர்த்தும் போது உரிய மரபுகளை பின்பற்றுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ள நிலையில், அதனையும் மீறி சிலர் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளி
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதி மற்றும் அதன் சுற்று வட்
அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்
இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டலத் தாழ்
2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும்
காலி முகத்துவாரப் பகுதியில் 70 இலட்சம் ரூபா பெறுமதிய
வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் உள்ள வீடொன்றின்
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய
லங்கா சதொச நிறுவனம் 10 வகையான பொருட்களின் விலைகளை குறைத
யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11
அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பத
இலங்கை மத்திய வங்கியின் கொள்கைகளை புறந்தள்ளி செயற்பட
ஓய்வூதிய கொடுப்பனவு பெறுவோருக்கு ராணுவத்தினரால் வ
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங
