திருகோணமலை - மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளதாக மூதூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் காலை 8 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அம்பாறையில் இருந்து திருகோணமலைக்கு பயணித்த பயணிகள் பேருந்தும் - டிப்பர் ரக வாகனமும் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
டிப்பர் வாகன சாரதி படுகாயங்களுடன் வாகனத்தில் சிக்குண்டு தவித்ததையடுத்து சுமார் அரை மணி நேரம் பொதுமக்கள் போராடி டிப்பர் வாகனச் சாரதியை டிப்பரிலிருந்து இழுத்தெடுத்து மீட்டுள்ளனர்.
இவ்விபத்தில் காயமடைந்த 26 பேரும் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தினையடுத்து திருகோணமலை - மட்டக்களப்பு வீதியின் போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் தடைபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இச் சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல
வவுனியாவில் தொடர் செயின் அறுப்புச் சம்பவங்களில் ஈடுப
இரண்டு நாள் உத்தியோகவூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களா
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 09 விமானங்கள் ஊடா
பணி நீக்கப்பட்ட மில்கோ நிறுவனத்தின் தலைவர், இலங்கை உர
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கடந்த சில தினங்க
மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள நிபந்தனைகளை மீ
டீசல் தட்டுப்பாடு காரணமாக திங்கட்கிழமை (6) முதல்
சமகால அரசாங்கத்தை பதவி விலகுமாறு கூறுவது இலகுவானது. ஆ
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்தைக
வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட
க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்
யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் ஐவர் உட்பட 6 பேருக்கு
கொழும்பு துறைமுக நகரத்தில் புகைப்படம் மற்றும் காணொளி
