இலங்கை அரசினால் தேசிய நிகழ்வாக அறிவிக்கப்பட்டுள்ள கல்முனைக்குடி நாகூர் ஆண்டகை தர்ஹா என்றழைக்கப்படும் கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 200 வது கொடியேற்ற விழா அடுத்தவருட ஆரம்பத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் எவ்வாறு விழாவை நடத்துவது என்பது தொடர்பிலும், முத்திரை வெளியிடுவது தொடர்பிலும் இன்னும் பல முக்கிய தீர்மானங்களை எடுப்பது தொடர்பிலுமான கலந்துரையாடல் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலாளரின் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்வில் கல்முனை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி. அன்ஸார், கல்முனைக்குடி நாகூர் ஆண்டகை தர்ஹா மற்றும் கல்முனை முஹையத்தீன் ஜும்மா பெரியபள்ளிவாசலின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ், உலமா சபையினர், கல்முனைக்குடி நாகூர் ஆண்டகை தர்ஹா மற்றும் கல்முனை முஹையத்தீன் ஜும்மா பெரியபள்ளிவாசலின் நிர்வாக சபையினர், அரச அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டு விழா நிகழ்வுகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்க
நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் ப
முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்மலை தண்ணிமுறிப்
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் 10 வயதுடைய சிறுமி ஒருவ
தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை இலங
ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில்இ நிறை குறைந்த அதி
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் தீ காயங்களுடன் உயிரிழந்த
வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்ற
காலிமுகத்திடல் பகுதியில் வழமைக்கு மாறாக திடீரென பொலி
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வென்டிலெட்டர் க
திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முத
ஜயந்த கெட்டகொட சற்றுமுன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அ
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெரடுவுக்கும், இ
சிறுநீரகத்தில் கல் சேர்ந்திருப்பதை முன்கூட்டியே கண்
நியாயமற்ற வரிவிதிப்பு மற்றும் அரசின் தன்னிச்சையான நட
