முன்னாள் துணை பிரதமரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.
ஜி-20 மாநாட்டிற்காக இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை முன்னிட்டு கூறியிருப்பதாவது:-
இந்தியா எப்போதுமே திறமையாகவும், உணர்திறன் கொண்டதாகவும், எச்சரிக்கையாகவும், அடக்கமாகவும், வளர்ச்சியுடனும் இருக்க வேண்டும் என சர்தார் வல்லபாய் பட்டேல் விரும்பினார். அவர் எப்போதும் தேச நலனுக்கு முன்னுரிமை அளித்தார்.
இன்று அவரிடமிருந்து உத்வேகத்தைப் பெற்று, நாடு வெளிப்புற மற்றும் உள் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டதாக மாறி வருகிறது.
கடந்த ஏழு ஆண்டுகளில் பல சகாப்தங்களாக உள்ள பழமையான தேவையற்ற சட்டங்களில் இருந்து நாடு விடுவிக்கப்பட்டுள்ளது.
நிலம், நீர், காற்று, விண்வெளி என அனைத்து துறைகளிலும் இந்தியாவின் திறன்கள் மற்றும் உறுதிப்பாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்ளது.
ஒரே பாரத், சிறந்த இந்தியா என்பதற்காக தனது உயிரைக் கொடுத்த சர்தார் பட்டேலுக்கு தேசம் அஞ்சலி செலுத்துகிறது. பட்டேல், வரலாற்றில் மட்டும் அல்ல அனைத்து இந்தியர்களின் இதயங்களிலும் வாழ்கிறார்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

கேரளாவில் கம்யூனிஸ்டு கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இடைய
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகால சிறை தண்டனை முடிந்
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அற
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் மற்றும் புதுச்சே
குர்கிராமில் நடைபெற்ற பணியாளர் அரசு காப்பீட்டு கழக (இ.
இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட 2 புதிய போர் கப்பல்கள்இ இ
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா த
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி முனுசா
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்
வீட்டில் துாங்கி கொண்டிருந்த தம்பியை,அண்ணன் சரமாரியா தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர்இ குருவிக்காரர் உள மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள யசோதா நகரை சே தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 உக்ரைன் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய ப கொரோனாவின் 2-வது அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வங
