திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதை இந்தி திரையுல உலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் அமிதாப்பச்சன் ஏற்கனவே பெற்றுள்ளார்.
மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கும், இயக்குனர் பாலச்சந்தருக்கும் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்துக்கு 2019-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.
இன்று டெல்லியில் தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் மத்திய மந்திரிகள் அனுராக் தாக்கூர், முருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்றவர்கள் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

சூரியா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தி
விஜய் டிவி பிரபலமான தொகுப்பாளினி பிரியங்காவுக்கு தனி
நடந்து முடிந்த பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சியின் மூலம்,
இறுதி வாரத்தை நெருங்கியுள்ள பிக் பாஸ் சீசன் 5வின் டைட்
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்&
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், வி
பாரதி கண்ணம்மா சீரியல் TRP-யில் தொடர்ந்து பல சாதனைகளை பட
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜ
பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்த
நடிகை லொஸ்லியா நேர்கானல் ஒன்றில் தன்னுடைய முதல் காதல்
கொல்லிமலைப் பகுதியில் அதிகம் இதுவரை சினிமா படப்பிடிப
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து நேற்று வெளிவந்த
அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் &l
கவலை வேண்டாம், இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி ப
வசூல் செய்ததாக சொல்லப்பட்ட பிகில்.!
நடிகர் விஜய்
