காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்து உள்ளனர். இவர்கள் விவாகரத்துக்கு பல காரணங்கள் இருப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் பரவி வந்தன.
இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “என் சொந்த பிரச்சினையில் நீங்கள் காட்டிய உணர்வுகள் என்னை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. என் மீது வைக்கப்பட்ட பொய்யான வதந்தி மற்றும் கதைகளுக்கு எதிராக நீங்கள் காட்டிய அனுதாபத்திற்கு நன்றி.
முதலில் வேறு ஒருவருடன் தொடர்பு இருக்கிறது என்றார்கள், பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை, நான் ஒரு சந்தர்ப்பவாதி என்றார்கள். தற்போது நான் கருக்கலைப்பு செய்ததாக கூறுகின்றனர்.
விவாகரத்து என்பது பெரிய வலி நிறைந்த ஒன்று. இந்த கடினமான நேரத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். என் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து வருகிறது. சத்தியமா சொல்றேன், இவையெல்லாம் எந்த வகையிலும் என்னை உடைக்காது” என பதிவிட்டுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கொ
பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்
கடந்த திங்கட்கிழமை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்ட
தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வர
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன
நடிகை ஜோதிகா, திருமணத்துக்கு பின்னர் கதாநாயகிக்கு முக
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேக
தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமா
தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சி
பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்த
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி
தமிழில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’, விஜய
விவாகரத்து பிரச்சினையால் சமூகவலைத்தளங்களில் அதிகமாக
கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்த
