பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. கேப்டன் அமரிந்தர் சிங் முதலமைச்சராகவும், முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சித்து காங்கிரஸ் கட்சியின் அம்மாநில தலைவராகவும் இருந்து வந்தனர். இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் அமரிந்தர் சிங் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகிய நிலையில், திடீரென சித்துவும் கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமா இன்னும் ஏற்கப்படாமல் உள்ளது. அதேவேளையில் சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
நேற்றிரவு நவ்ஜோத் சிங் சித்து முதல்வர் சரண்ஜித் சிங்கை சந்தித்து பேசினார். இருவருக்கும் இடையிலான சந்தித்து சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. இந்த நிலையில் சித்து காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் ஒருங்கிணைப்பு குழு ஒன்று உருவாக்கப்பட இருப்பதாகவும், பஞ்சாப் அரசு முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது இந்த குழுவிடம் ஆலோசனை நடத்தும் என்றும் கட்சி வட்டாரங்களில் இருந்து செய்தி கசிந்துள்ளது. அந்த குழுவில் முதல்வர், சித்து மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக காவல்துறையினருக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கப்ப
இந்தியாவுக்கு எதிரான சர்வதே சதி நடக்கிறது என்று மத்
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா
கேரளாவில் நடந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா த
புதுச்சேரி மாநிலத்தில்
இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா மற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக இதுவரை அரச பேருந்து ஓட்டுனரை வழிமறித்து தாக்கிய நான்கு பேரை அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் தமிழகத்தில் திருநங்கையாக மாறிய மகனுக்கு அனைவர் முன்ன உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநா புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலைச் சேர்ந்தவர் துரைரா டெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டப்படி டிரா காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றும
